இந்தியத் தலைநகர் டெல்லியில் டிசம்பர் 15 அன்று குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது, ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக நூலகத்துக்குள் புகுந்து போலீசார் தாக்குவதைக் காட்டும் வீடியோ நேற்று வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது.
இந்த வீடியோவை ஜாமியா மாணவர் ஒருங்கிணைப்புக் குழு ட்விட்டரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பகிர்ந்தது.
இதையடுத்து போலீஸ் தரப்பில் இருந்து வெளியானதாகக் கூறப்படும் மற்றொரு வீடியோவும் வெளியானது. அந்த வீடியோவில் நூலகத்தில் இளைஞர் ஒருவர் முகத்தை மூடிக் கொண்டிருப்பதாகவும், ஒருவர் மூடிய புத்தகத்தைப் படிப்பதாகவும், அது ஏன் என்றும் விமர்சனங்கள் பாஜக தரப்பில் இருந்து வைக்கப்படுகின்றன.
மூடிய புத்தகத்தை படிக்கிறாரா மாணவர்? நூலகத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் படபடப்பாக வாயிலையே பார்த்துக் கொண்டிருப்பது ஏன்? நூலகத்தில் அமைதியாக அமர்ந்து படிக்கலாம் என்னும்போது, அவர்கள் பதற்றத்துடன் காணப்படுவது ஏன்? என்பது போன்ற கேள்விகளும் வைக்கப்படுகின்றன.